இனியும் ...

இனியும் இனியும் 
என்றே கழிந்தது 
ஒரு யுகம்
இனி (என்பது) இப்பொழுது 
ஆகட்டும்!




இடம் இழந்து இடர்பட்டது மழை
இடர்பட்டும் இடிவாங்குகிறது  மழை
இடிவாங்கியும் இடம் தேடுகிறது மழை
தனக்காக அல்ல நமக்காக
இனியும், இனியும் உணராவிட்டால்
இவ்வுலகு நமக்கு இல்லை!


வேளச்சேரி ஏரி http://www.thehindu.com/multimedia/dynamic/00659/Chennai_CITY_Region_659183f.jpg

21 கருத்துகள்:

  1. அருமை. விழிப்புணர்வுக் கவிதை.
    தம +1

    பதிலளிநீக்கு
  2. அருமையான வரிகள் சகோ! இனி என்பது இந்த நொடியே ஆனால் நல்லதே!

    கீதா: இப்படித்தான் எல்லா குப்பைகளையும் நினைத்த இடத்தில் கொட்டுவது மக்களும், மாநகராட்சி வண்டிகளும் குப்பைகளை அகற்றுகின்றேன் என்று சொல்லி அவற்றைப் பள்ளிக்கரணைப் பகுதியில் கொட்டி இப்படி நோய்களைப் பரப்பத்தான் செய்கின்றது. எங்கள் வீட்டருகில் மான்கள் நிறைய வரும், குரங்குகள் நிறைய வரும், (ஐஐடி சுவர் ஒட்டி வரும் பகுதியில் வசிப்பதால்) அவைகளும், ரோடில் உலாவரும் மாடுகளும், நாய்களும் இந்தப் ப்ளாஸ்டிக்கை, கழிவுகளைத்தான் உண்ணுகின்றன. அவல நிலை. மக்களும் அரசும் இணைந்து செயல்பட்டால் நல்லது நடக்கும். இனியாவது சுயநலம் கருதாமல் இணைந்து செயல்பட வேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. உணர வேண்டிய தருணம்... உணராவிட்டால் எதுவுமே இல்லை தான்...

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்
    அற்புதமான கவிதை இரசித்தேன் த.ம 5
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  5. நாளை நாளை என நாளை கடத்தாதே1
    இன்றே செய், அதையும் நன்றே செய் என்கின்றீர்கள்!

    நல்ல சிந்தனை!

    பதிலளிநீக்கு

  6. மஞ்சள் துணிப்பை தூக்கி அழைந்து திரிந்த காலங்களில் இப்படி பிரச்சனைகள் அதிகம் எழுந்ததில்லை... இண்றைய நவ நாகரீக காலங்களில் பிளாஷ்டிக் பை எடுத்து அழைவதால் இப்படி இறுதியில் கஷ்டப்பட வேண்டி இருக்கிறது

    பதிலளிநீக்கு
  7. இனியும் மக்கள் திருந்த மாட்டார்கள்..
    கோடிகளைத் தின்று தீர்க்கும் துறைகளும் திருந்த மாட்டா...

    பதிலளிநீக்கு
  8. இனியும் என்பது இப்போதே ஆகட்டும்மா...நல்ல கவிதை...

    பதிலளிநீக்கு
  9. இனியும் உணராவிட்டால்
    இவ்வுலகு நமக்கு இல்லை!///
    எப்போதும்...அருமை குறும்பா.....

    பதிலளிநீக்கு
  10. அருமையான கவிதை. நேரம் கிடைக்கும் போது எனது வலைப்பூவையும் பார்வையிட வாருங்கள்.

    பதிலளிநீக்கு
  11. இப்போதேனும் உணர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளாவிடின் இனி எப்போதும் இல்லை உய்வு.. சிந்திக்கவைக்கும் வரிகள் கிரேஸ்.

    பதிலளிநீக்கு
  12. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  13. கருத்தாழமிக்க கவிதை .. சூப்பர்

    பதிலளிநீக்கு
  14. இனியும் உணராவிட்டால் தொடரும் தொல்லை.....

    விழிப்புணர்வு தரும் கவிதை நன்று. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  15. எல்லோரும் தான் காரணம் என்பதை இப்போதும் உணரவில்லையெனில் ....

    பதிலளிநீக்கு
  16. இது பற்றிய கருத்தை நாளை வந்து எழுதலாம்னு போகப் பார்த்தேன்.
    அப்பறம்..கவிதையே இதுபற்றியது தானே..னு மீண்டும் வந்துட்டேன் மா.
    கவிதையோடு போட்டிபோட்டுக் கவர்ந்தன படங்களும். வாழ்த்துகள்மா.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...