வலைப்பதிவர் திருவிழாவில் நூல் வெளியீடு


இதோ வந்துவிட்டது வலைப்பதிவர் திருவிழா. ஏற்கெனவே அறிந்தவரை எல்லாம் கண்டு மகிழவும், அறியாதவரை அறிந்துகொள்ளவும் பதிவர்கள் கூடும் இனிய திருவிழா. இத்திருவிழாவில் எனது முதல் கவிதைத்தொகுப்பு வெளியிடுவதை எண்ணி மனம் மகிழ்கிறேன். என்னுடைய நூல் வெளியீடு நிகழ்ச்சி நிரல் வருமாறு:

தலைமை : கவிஞர் திரு.நா.முத்துநிலவன் (தமிழாசிரியர், த.மு.எ.ச. மாநிலத்துணைத்தலைவர்)
இவரின் வலைப்பக்கம் http://valarumkavithai.blogspot.in/.

வெளியிட்டு வாழ்த்துபவர்: திரு.வின்சென்ட் (கோட்டப் பொறியாளர் - ஓய்வு, பி.எஸ்.என்.எல்., மதுரை, என் அன்புத் தந்தை)

பெற்றுக்கொண்டு வாழ்த்துபவர்: கவிஞர் திரு.நா.முத்துநிலவன் (தமிழாசிரியர், த.மு.எ.ச. மாநிலத்தலைவர்)

வாழ்த்துரை:
திரு.கஸ்தூரிரங்கன் (ஆசிரியர்)
இவரின் வலைப்பக்கம் http://www.malartharu.org/

திரு.ஓ.முத்து (துணைக் கோட்டப்பொறியாளர் - ஓய்வு, பி.எஸ்.என்.எல்., மதுரை)


ஏற்புரை: வி.கிரேஸ் பிரதிபா (வலைத்தளம் தேன் மதுரத்தமிழ்)

என் நூல் வெளியீட்டைச் சிறப்பிக்கும் இவர்களுக்கும் இதற்குத் தளம் அமைத்துக் கொடுத்தப்  பதிவர்த்  திருவிழா நிர்வாகக்குழுவின் சீனா ஐயா, தனபாலன் அண்ணா, பிரகாஷ், மதுரை சரவணன் சகோ மற்றும் அனைத்துப் பதிவுலக நண்பர்களுக்கும் என் மனங்கனிந்த நன்றிகள்.

அன்புடன்,
கிரேஸ் 

11 கருத்துகள்:

  1. நேரில் வருவதாக இருந்ததும் இறுதியில் வரமுடியாமல் பிரயாணம் மேற்கொள்ள முடியாமல் போனதால்....

    பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள் சகோதரி! என்ன ஒரு இனிய தருணம்! தங்கள் எழுத்துக்கள் மேலும் மேலும் வளர எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்! சகோதரி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களைச் சந்திக்க முடியாமல் போனது வருத்தமே..
      உங்கள் பாராட்டிற்கும் அன்பான வாழ்த்திற்கும் மனங்கனிந்த நன்றி சகோதரரே!

      நீக்கு
  2. வாழ்க நலம்..
    நூல் வெளியீட்டு விழா சிறக்க நல்வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லபடியாக நடந்தது ஐயா..வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றிகள்!

      நீக்கு

  3. புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துகள்!
    அதேவேளை
    தமிழ்ப் பதிவர் சந்திப்புக்கு வாழ்த்து!
    http://eluththugal.blogspot.com/2014/10/blog-post_97.html

    பதிலளிநீக்கு
  4. அப்பா வெளியிட அண்ணன் பெற்றுக்கொள்கிறேன்.
    ரொம்ப மகிழ்ச்சிம்மா...
    தமுஎச மாநிலத் துணைத்தலைவர் என்று திருத்துமாறு வேண்டுகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அண்ணா, யாருக்கு கிடைக்கும் இப்படியொரு வாய்ப்பும் மகிழ்ச்சியும்!!
      மனமார்ந்த நன்றி அண்ணா..
      திருத்திவிட்டேன்.

      நீக்கு
  5. துளிர் விடும் விதைகளை நேரிலே ரசிக்க ஆவலோடு இருக்கிறேன் ,வெளியீட்டிற்கு வாழ்த்துகள்!
    த ம 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களைச் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. நன்றி சகோதரரே!

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...